கொழும்பு,
எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய இடமளிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரி வித்தார். நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் பல்வேறு துறை, துறையினரால் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
களுத்துறை நகர் சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்யவது குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. பெரு நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இந்த அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார். பிரதமர் மேலும் கருத்து வெளியிடுகையில், உத்தேச புதிய அரசியலமைப்பு நாட்டை பிளவுபடுத்தும் என்று சில தரப்பினரால் முன்னெடுத்துச் செல்லப்படும் பிரச்சார நடவடிக்கைகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று குறிப்பிட்டார்.
எந்தவொரு புதிய அரசியலமைப்பு ஆலோசனையையும் நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.