லிமா,
பெரு நாட்டின் வடகிழக்குப் பகுதியில் வீசிய பனிப்புயலால் ஹோட்டலில் சுவர் இடிந்து 15 பேர் உயிரிழந்தனர். பெரு நாட்டின் வடகிழக்குப் பகுதியில் பலத்த பனிப்புயல் வீசி வருகிறது. இந்நிலையில் அபுரிமாக் பகுதிக்குட்பட்ட அபன்கே நகரில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நேற்று ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் அதிகமான விருந்தினர்கள் பங்கேற்றனர்.
அப்போது, பனிப்புயலின் வேகத்தால் அருகில் இருந்த பாறைகள் மற்றும் மண்கட்டிகள் அந்த ஓட்டல் சுவற்றின் மீது பலமாக மோதின.இதனால் ஹோட்டலின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாகவும் 30-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் அபன்கே நகர மேயர் எவரிஸ்ட்டோ ரமோஸ் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள உயிரியல்
மேலும்பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா
மேலும்இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு
மேலும்பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள்
மேலும்விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.
மேலும்