கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 வீடுகளை கட்டித் தர உள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். கஜா புயல் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன். எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும் அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இடிந்து முற்றிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 வீடுகளை கட்டித் தர உள்ளேன். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் நானே நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள். நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன். அன்பு பத்திரிக்கை நண்பர்க ளுக்கும் ஒரு வேண்டுகோள். உங்கள் பார்வைக்கு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஏதாவது தகவல் வந்தாலும் எங்களிடம் தெரிவிக்கவும் என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்
மேலும்பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்
மேலும்40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்
மேலும்கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்
மேலும்